இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணி, வன்முறையாக மாறி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதற்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதி கேட்டு மக்கள் அமைதியாகப் போராடிய பொழுதெல்லாம் அலட்சியப்படுத்தியது அரசுகள். அரசின் அலட்சியமே அனைத்து தவறுகளுக்கும் காரணம். இதில் குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை. அவர்கள் எப்பொழுதும் உயிர் இழக்கிறார்கள். முன்பு ஆலையினால் இப்போது அரசின் அணையினால்.. அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கமல், மக்கள் வாழும் பகுதியை மாசுப்படுத்தி கொண்டிருக்கிறது ஸ்டெர்லைட் ஆலை. ஆலைக்கு ஆதரவாக சட்டதிட்டங்களை ஏவுவது கண்டிக்கத்தக்கது. துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்பது தான் தமிழகத்தின் இன்றையே கேள்வி. இந்த கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். மேலிடத்தின் உத்தரவு இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடந்திருக்காது.
தூத்துக்குடியில் நடந்த சோகத்தை தமிழகம் மறக்காது. போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், துப்பாக்கிச்சூடு வரை போனது ஏன். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே இன்றைய நிலை.
போராட்டத்திற்கு மக்கள் நீதி மையம் துணை நிற்கும். பேச்சுவார்த்தையில் தீர்க்க வேண்டியதை போராட்டத்தில் தீர்க்க முடியும் என்பது விவேகம் அல்ல.
போராட்டம் என்ற பெயரில் மக்களை கொல்வது அர்த்தமில்லை.
இறந்தவர்கள் குடும்பத்தை காக்க வேண்டும். மக்கள் அமைதி காக்க வேண்டும் என அரசு சொன்னால் போதாது. அரசும் அமைதியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கமல் கூறினார்