தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தியத் திரையுலகில் வரவேற்பிலும், வசூலிலும் பெரிய சாதனை படைத்த படம் பாகுபலி. இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி இந்திய மக்களை மட்டுமல்லாது உலக அளவிலும் உள்ளவர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக ஜப்பான் நாட்டு மக்கள் இந்திய மக்களை விட பாகுபலி படத்தைக் கொண்டாடித் தீர்த்தார்கள்.
அந்தப் படங்களின் கதாபாத்திரங்களை மையமாக வைத்து பலவிதமான பொருட்களைத் தயாரிப்பது, படங்கள் வரைவது என அந்தப் படத்தை வேறுவிதமாக ரசித்தார்கள். படத்தின் தயாரிப்பாளர் ஷோபு, இயக்குனர் ராஜமௌலி ஜப்பான் நாட்டிற்கும் சென்று அங்கு பாகுபலி 2 படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
இப்போது ஜப்பான் நாட்டில் பாகுபலி படத்தின் கதாபாத்திரங்களை வைத்து காமிக்ஸ் புத்தகத்தை உருவாக்கப் போகிறார்களாம். அது பற்றி கருத்து தெரிவித்த ராஜமௌலி, “என்னுடைய சிறிய வயதில் காமிக்ஸ் புத்தகங்கள் எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இப்போது நான் எடுக்கும் படங்களுக்கம் அது ஒரு உத்வேகமாக இருக்கிறது. ஜப்பான் நாட்டில் பாகுபலி காமிக்ஸ் புத்தக வடிவில் வர இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என் வாழ்க்கை முழுமையாகி இருப்பதாக நான் கருதுகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டு மக்கள் தனக்கு அளித்த பரிசுப் பொருட்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாகவும், அற்புதமானகவும் உள்ளதாக ராஜமௌலி தெரிவித்துள்ளார்.