தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் தெலுங்கில் 'மகாநதி' மற்றும் தமிழில் 'நடிகையர் திலகம் என மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகி இருந்தது. இதில் ஆச்சர்யப்படும் விதமாக மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் கதாபாத்திரம் கொஞ்சம் வில்லத்தன்மை சாயலுடன் உருவாக்கப்பட்டு இருந்தது. தற்போது ஜெமினியின் மகள் கமலா செல்வராஜ், 'மகாநதி' படத்தில் என் தந்தையை தவறாக சித்தரித்துள்ளார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் எனது தந்தை ஜெமினியும் சேர்ந்தே மும்மூர்த்திகள் என அழைக்கப்பட்டனர். ஆனால் எனது தந்தையை பட வாய்ப்பே இல்லாத நடிகர் போல காட்டியுள்ளார்கள். மேலும் சாவித்திரிக்கு குடிக்கும் பழக்கத்தை தூண்டிவிட்டதே என் தந்தை தான் என காட்டியுள்ளார்கள். இதில் துளியும் உண்மை இல்லை.
சாவித்திரி சிவாஜியை வைத்து தமிழில் 'பிராப்தம்' படத்தை தயாரிக்க முடிவு செய்த போது, அது வேண்டாம் என கூறி அவரது மனதை மாற்ற எனது தந்தை ஜெமினி கணேசன் அவரை தேடிச்சென்றார்.. ஆனால் அவரை உள்ளே நுழையவிடாமல் காவலாளியையும் நாயையும் விட்டு துரத்தினார் சாவித்திரி. அதனாலேயே அதன்பின்னர் என் தந்தை, சாவித்ரியை பார்க்க செல்வதை நிறுத்திவிட்டார்” என கோபமாக கூறியுள்ளார் கமலா செல்வராஜ்.