நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ரெட்டைச்சுழி, நெடுஞ்சாலை, மாயா, நாகேஷ் திரையரங்கம் படங்களில் நடித்துள்ள ஆரி அடுத்து நடிக்கும் படம் எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான். சுபாஷி என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் தவிர மொட்டை ராஜேந்திரன், பகவதி பெருமாள் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
லட்சுமண் ஒளிப்பதிவு செய்கிறார், கார்த்திக் ஆச்சார்யா இசை அமைக்கிறார். யு.கவிராஜ் என்ற புதுமுகம் இயக்குகிறார். பல வருடங்களுக்கு பிறகு ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்ராஹிம் ராவுத்தரின் வளர்ப்பு மகன் முகமது அபுபக்கர் தயாரிப்பாளர். படம் பற்றி இயக்குனர் கவிராஜ் கூறியதாவது:
அண்டவெளியில் சூரிய குடும்பத்திலேயே மனித இனம் தான் உயரிய இனம் என்கிறார்கள். ஆனால் இந்த பேரண்டத்தில் பல உலகங்கள் இருக்கிறது. அவற்றில் நம்மைவிட மேன்மையான மனிதர்களோ, அல்லது இன்னொரு உயிரினமோ வாழலாம். இந்த பேரண்டத்தையே கைக்குள் அடக்குகிற சக்தி ஒருவனுக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் அதுதான் கதையின் நாட்.
வேலையில்லா பட்டதாரியான ஆரிக்கு அப்படியொரு சூப்பர் பவர் கிடைக்கிறது. அதை வைத்துக் கொண்டு அவர் என்ன செய்கிறார் என்பதை காமெடியாக சொல்லுகிற படம். ரசிகர்களுக்கு இது புதிய அனுபவமாக இருக்கும். என்கிறார் கவிராஜ்.