இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ள படம் காளி. பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார், கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார். விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு ஹீரோயின்கள் ஜோடியாக நடித்துள்ளனர். இதில் விஜய் ஆண்டனி அம்ரிதாவுடன் நெருக்கமாக நடித்துள்ளார். இதுபற்றி விஜய் ஆண்டனி கூறியதாவது:
பொதுவாக நான் எல்லா படத்திலும் ரொம்ப சீரியசாக நடிப்பதாகவும், ஹீரோயின்களை தொடாமல், நெருக்கம் காட்டாமல் நடிப்பதாவும் சொல்கிறார்கள். அது உண்மைதான். இன்னொரு பெண்ணை கட்டிப்பிடித்து நடிப்பதில் எனக்கு தயக்கம் இருந்தது. ஆனால் இப்போது அதை மாற்றிக் கொண்டுவிட்டேன். நடிப்பு என்றால் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டேன். இந்தப் படத்தில் 4 ஹீரோயின்கள் இருந்தாலும் அம்ரிதாவுடன் நெருக்கமாக நடித்திருக்கிறேன். சீரியசாக நடிக்கிறேன் என்கிற இமேஜையும் இந்தப் படம் மாற்றும் என்றார்.
இதுகுறித்து அம்ரிதா கூறிதாவது: விஜய் ஆண்டனி ரொம்ப அமைதி. அதிகமாக பேச மாட்டார். ஒரு பாடல் காட்சியில் நெருக்கமாக நடித்திருக்கிறோம். முதலில் இருவருக்குமே தயக்கம் இருந்தது. நடன இயக்குனர்தான் புரிய வைத்து நடிக்க வைத்தார் என்றார்.