ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமந்தா, அர்ஜுன் நடித்த இரும்புத்திரை திரைப்படம் நேற்று வெளியானது. மத்திய அரசின் கனவுத் திட்டமான டிஜிட்டல் இந்தியா, கேஸ்லெஸ் இந்தியா, போன்றவை படத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த ஆதார் தகவல்கள் திருட்டு, வங்கி மோசடி செய்தவர்கள் வெளிநாடு தப்பி ஓட்டம் போன்றவை படத்தில் காட்டப்படுகிறது. இது அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள்.
விஷாலுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்றும் சில அமைப்புகள் அறிவித்துள்ளன. இரும்புத்திரை படம் திரையிடப்பட்டுள்ள சில தியேட்டர்களில் காட்சிகள் குறைக்கப்பட்டதாகவும், நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் விஷால் வீடு மற்றும் அலுவலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து விஷால் கூறியதாவது : சமூகத்தில் நடந்து வரும் பிரச்னைகள், வருங்கால சந்ததிகள் சந்திக்கப்போகும் பிரச்னைகளைத் தான் படத்தில் பேசி உள்ளோம். யாருக்கும் எதிராகவோ, விமர்சித்தோ படத்தில் கருத்து சொல்லப்படவில்லை. அதனால் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான் சட்டத்தை மதிக்கிறவன், காவல்துறையை நம்புகிறவன். எதிர்ப்புகள், போராட்டங்களை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். என்றார்.