பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஷால், சமந்தா, அர்ஜுன் நடித்துள்ள படம் இரும்புத்திரை. இதனை பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ளார். இந்தப் படம் இணையதளத்தில் மக்களின் தகவல்களை திருடும் கும்பல்களை பற்றிய கதை. வருகிற 11ந் தேதி படம் வெளிவருகிறது.
இந்த நிலையில் படத்துக்கு தடைவிதிக்க கோரி, நாமக்கல்லை சேர்ந்த நடராஜன் என்பவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
இரும்புத்திரை என்ற படம் வருகிற 11ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் மத்திய அரசின் ஆதார் அட்டை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் டிஜிட்டல் திட்டத்திற்கும், கொள்கைக்கும் எதிரான காட்சிகள் அமைந்துள்ளன. இதனை பொதுமக்கள் பார்த்தால் தங்களின் ஆதார் தகவல்கள் குறித்து பீதி அடைவார்கள்.
மத்திய அரசின் நலத்திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளதால் இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை, தணிக்கை குழவிற்கு உரிய உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று(மே 9) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, படம் தணிக்கை செய்யப்பட்டு தான் வெளியாகி உள்ளது. எனவே படத்திற்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டார்.