இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மன்னர் வகையறா படத்தை அடுத்து, 'கன்னிராசி', 'களவாணி-2' உட்பட அரைடஜன் படங்களில் நடித்து வருகிறார் விமல். இவற்றில் 'கன்னிராசி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. விரைவில் இப்படம் வெளியாகிறது.
'களவாணி-2' படத்தின் படப்பிடிப்பு மே 3-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இந்த படங்களைத் தொடர்ந்து எழில், சுராஜ் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார் விமல். இதில் சுராஜ் இயக்கும் படத்தில் விமலுடன் வடிவேலுவும் இணைந்து நடிக்க இருக்கிறார்.
முழுநீள காமெடி படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் விமலும், வடிவேலுவும் போலீஸ்காரர்களாக நடிக்க இருக்கிறார்கள். அதாவது சுராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த மருதமலை படத்தில் வடிவேலு போலீஸ் ஏட்டாக நடித்தார். அர்ஜூன் கான்ஸ்டபிளாக நடித்தார்.
தற்போது விமல் நடிக்க உள்ள படத்தில் இந்த காமெடி டிராக்கையே முழுநீளப்படமாக எடுக்கும் திட்டத்தில் திரைக்கதை அமைத்திருக்கிறாராம் சுராஜ். இதனால் படத்துக்கு மருதமலை-2 என்று பெயர் சூட்டலாமா என்றும் யோசித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறது.