ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தலைநகரம், படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன், சகலகலாவல்லவன், கத்திச் சண்டை படங்களை இயக்கியவர் சுராஜ். இதில் இவர் இயக்கிய மருதமலை படத்தின் காமெடி கோல்டன் காமெடியாக அமைந்தது.
வடிவேலுவும், அர்ஜூனும் போலீசாக நடித்த காமெடி அது. இப்போது இந்த போலீஸ் காமெடியை டெவலப் பண்ணி அடுத்த படம் இயக்குகிறார் சுராஜ். இதில் வடிவேலு, விமல் காமினேஷன். திரைக்கதை அமைக்கும் பணி முடிந்திருக்கிறது விரைவில் முறைப்படி அறிவிக்க இருக்கிறார்கள்.
'மன்னர் வகையறா' படத்திற்கு பிறகு தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களும் புதிய இயக்குனர்களும் விமலை அணுகி கதை சொல்லி வருகின்றனர். இந்த வருடத்தில் விமல் நடிப்பில் அரை டஜன் படங்களுக்கு மேல் வெளிவர இருக்கின்றன. இயக்குனர் எழில் டைரக்சனில் மீண்டும் நடிக்கிறார்.
இதுதவிர வெற்றிவேல் இயக்குனர் வசந்தமணி, தமிழன் பட இயக்குனர் மஜித், ஆகியோரின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார் விமல். 'மன்னர் வகையறா' வை இயக்கிய பூபதி பாண்டியன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். வரலட்சுமி ஜோடியாக நடித்துவரும் 'கன்னிராசி' படம் இறுதிக்கட்ட பணிகளில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சற்குணம் டைரக்சனில் 'களவாணி-2' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.