மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா , தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் 'யுடர்ன்' படத்தின் படப்பிடிப்பில் கேக் வெட்டி அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு படத்தின் இயக்குனர் பவன்குமார், நடிகர் ஆதி உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
திருமணத்திற்குப் பிறகு சமந்தா கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது. அது மட்டுமல்ல சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த 'ரங்கஸ்தலம்' தெலுங்குப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதோடு மே இரண்டாவது வாரத்தில் அவர் நடித்துள்ள 'மகாநதி' தெலுங்குப் படமும், 'இரும்புத் திரை' தமிழ்ப் படமும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கில் வெளியாவது அவருக்கு சிறப்பு.
சமந்தாவிற்கு பல தெலுங்கு, தமிழ் நடிகர்கள், நடிகைகள் காலை முதலே வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.