மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் இருக்கும் பிரபல நடிகையர், சமூக வலைதளங்களில், தாங்கள் நடிக்கும் படங்கள், அவற்றின் புகைப்படம், சுற்றுலா புகைப்படங்கள் போன்றவற்றைத் தான், அதிகம் பதிவிடுவது வழக்கம். அரசியல், பொது விஷயங்களைப் பற்றி, மறந்தும் பதிவிடுவது இல்லை.
ஆனால், பாலிவுட்டில் அப்படி அல்ல; பெரும்பாலான நடிகையர், துணிச்சலாக அரசியல் விமர்சனங்களை முன் வைக்கின்றனர். தங்களுக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் பல கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
கவுரவம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த, யாமி கவுதம் போடும் பதிவுகள் தான், வட மாநில அரசியல்வாதிகளை கலங்கடிக்கின்றன. அதிலும், சமீபகாலமாக நடக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து, சமூக வலைதளங்களில், கடுமையாக யாமி கவுதம் விமர்சித்துள்ளது, சக நடிகையரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.