இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள், தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினர். பின், இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் அளித்த பேட்டி:
திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில், முதல்வரை சந்தித்து, மனு அளித்தோம். சிறந்த படங்களை தேர்வு செய்யும் போது, மத்திய அரசு, தயாரிப்பாளருக்கு, சான்றிதழ், கேடயம், பரிசுத் தொகை கொடுப்பது போல், தமிழக அரசும் வழங்க வேண்டும். சென்னையில், படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். நடவடிக்கை எடுப்பதாக, முதல்வர் உறுதி அளித்துள்ளார் என்றார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர், ஆர்.கே.செல்வமணி கூறியதாவது:
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு, பையனுாரில், அரசு, 65 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளது. அந்த இடத்தை, ஓ.எம்.ஆர்., சாலையுடன் இணைக்க, அரசு உதவ வேண்டும். மருத்துவமனை கட்ட, நகருக்குள் நிலம் ஒதுக்க வேண்டும்.
தயாரிப்பாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சம்மேளனம், நடிகர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தையும் ஒருங்கிணைத்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி கட்டுப்பாட்டில், தமிழ்நாடு திரைப்பட துறைக்கான வாரியம் அமைக்க வேண்டும் என, முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.