'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபகாலமாக பெண்கள் மற்றும் சின்னஞ்சிறு பிள்ளைகள் அதிகளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். காஷ்மீர் சம்பவத்திற்கு பிறகு பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல்கள் நாடு முழுக்க ஒலிக்க தொடங்கின.
இந்நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடியவர்களுக்கு துாக்கு தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை ஜனாதிபதி பிரகடனப்படுத்தினார். இந்த சட்டம், உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
அதேசமயம், இந்த விஷயத்தில் சிறுமிகள் என்று மட்டும் எடுத்து கொள்ளாமல் எல்லா தரப்பு பெண்களுக்கும் நடக்கும் பாலியல் சம்பவ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கருத்து பரவ தொடங்கி இருக்கிறது.
இதே கருத்தை நடிகை வரலட்சுமியும் கூறியுள்ளார். அவர் தன் டுவிட்டரில், "டீன் ஏஜ் பெண்ணாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அனைத்து பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும். ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவரை தொடக்கூடாது" என கூறியுள்ளார்.