ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'பிரேமம்' சாய்பல்லவி தமிழில் நடித்து முதலில் வரவிருக்கும் படம் 'தியா'. தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே மலையாளம், தெலுங்கில் சில படங்களில் நடித்து அந்த இரு மொழிகளிலும் நல்ல பெயரைப் பெற்றுவிட்டார் சாய்பல்லவி.
ஆனால், தமிழில் அவர் அறிமுகமாகும் 'தியா' படம் வெளிவருவதற்கு முன்பே சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. இப்படத்தில் நடித்துள்ள தெலுங்கு நடிகரான நாக சௌரியா, படத்தின் நாயகி பற்றி குறை கூறும் விதத்தில் பேட்டி அளித்திருந்தார். “மற்றவர்கள் நன்றாக நடித்தால் அதை, சாய் பல்லவியால் பொறுத்துக் கொள்ள முடியாது. செட்டில் அவர் கண்டபடி நடந்து கொள்வார்,” என குற்றம் சாட்டியிருந்தார். அதோடு 'தியா' படத்தின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
நாக சௌரியாவின் குற்றச்சாட்டும் சாய்பல்லவிக்கு ஆச்சரியமாக உள்ளது. “எனக்கும் நாக சௌரியாவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் நல்ல நடிகர், செட்டில் அமைதியாக இருப்பார். என் வேலையைத் தவிர செட்டில் நான் வேறு எதையும் கவனித்ததில்லை. அப்படியிருக்க என் மீது ஏன் இப்படி குற்றம் சாட்டுகிறார் எனத் தெரியவில்லை. நாக சௌரியாவை நான் சில முறை தொடர்பு கொண்டேன். என்னைப் பற்றி ஏன் அப்படி சொன்னார் என தெரிந்து கொள்ள போன் செய்தேன். ஆனால், அவர் போனை எடுக்கவேயில்லை,” எனத் தெரிவித்துள்ளார் சாய் பல்லவி.
தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள இப்படத்தின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் முற்றிலும் புறக்கணித்துவிட்டார் நாக சௌரியா. தமிழில் எவ்வளவோ நடிகர்கள் இருக்கும் போது நாக சௌரியாவை இந்தப் படத்தில் நடிக்க வைக்காமலே இருந்திருக்கலாம் என்றே திரையுலகில் பலரும் பேசிக் கொள்கிறார்கள்.