தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜாதி வெறியால் ஆணவக்கொலை செய்யப்பட்டார் உடுமலைப்பேட்டை சங்கர். பின்தங்கிய வகுப்பை சேர்ந்த இவர் ஆதிக்க சாதியை சேர்ந்த கவுசல்யாவை காதலித்ததற்காக நடு ரோட்டில் படுகொலை ஆனார். இந்த கொலை சம்பவத்தில் தப்பிய கவுசல்யா தற்போது ஆணவக் கொலைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.
சங்கரின் கொலை சம்பவம் மாறாத சமூகம் என்ற பெயரில் சினிமாவாக தயாராகி வருகிறது. இதில் காதர் என்ற புதுமுகம் சங்கராகவும், திலிஜா என்ற புதுமுகம் கவுசல்யாவாகவும் நடித்து வருகிறார்கள். இவர்கள் தவிர நமோ நாராயணா, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். அஆஇஈ திரைப் பட்டறையின் சார்பில் என்.மணிகண்டன் தயாரிக்கிறார், பங்கஜ் எஸ்.பாலாஜி இயக்குகிறார். தினேஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், டேனியல் ஜோசப் மற்றும் சம்பத் இசை அமைக்கிறார்கள். படப்பிடிப்பு நடந்து வருகிறது.