600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
கலைப்புலி தாணு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருந்த போது பண்டிகை காலங்களில் மட்டுமே முன்னணி நடிகர்களின் படங்களை வெளியிடுவது, மற்ற நாட்களை சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஒதுக்குவது என்று ஒரு விதியை கொண்டு வந்தனர். ஆனால் பெரும்பாலும் இது நடைமுறைக்கு வந்தது கிடையாது.
தற்போது தணிக்கைச்சான்று பெற்ற தேதியின் அடிப்படையில் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற விதியை தயாரிப்பாளர்கள் சங்கம் கொண்டு வந்துள்ளது. இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், சில தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
“பல படங்கள் வாங்க ஆளில்லாமல் பெட்டிக்குள் முடங்கியுள்ளன. அப்படி மாதக்கணக்கில், வருடக்கணக்கில் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கும் படத்தை ஒருவர் திடீரென வாங்கினால், முன்னுரிமைப்படி அப்படத்துக்கு தான் முதலில் வெளியிட அனுமதி வழங்க வேண்டும். அப்படி வெளியிடும் போது, ஏற்கனவே ரிலீஸ் செய்யும் படங்களின் பட்டியலில் இருக்கும் படங்கள் பாதிக்கப்படாதா? அதன் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொள்வார்களா?” என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
அதுமட்டுமல்ல, முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் பண்டிகை காலங்களை குறிவைத்தே வெளியிடப்படும். இந்த வருட தீபாவளிக்கு சூர்யாவின் என்ஜிகே, அஜித்தின் விசுவாசம், விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம் ஆகியவை வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்தப் படங்களுக்கு முன்னால் தணிக்கைச்சான்று பெற்ற படங்கள் முன்னுரிமை அடிப்படையில் தீபாவளிக்கு வெளியாக வேண்டும். இவற்றை பின்னுக்குத்தள்ளிவிட்டு அஜித், விஜய், சூர்யா படங்கள் வெளியானால் பட்டியலில் உள்ள படங்களின் தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொள்வார்களா?
எனவே, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதியமுறைப்படி, முன்னணி நடிகர்களின் படங்கள் தீபாவளி பண்டிகையை தவறவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சொல்கின்றனர் திரையுலகினர்.