அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
இசையமைப்பாளராக இருந்த ஜிவி.பிரகாஷ், நடிகரான பிறகு சமூக சார்ந்த விஷயங்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டு, விவசாயம், ஹெட்ரோ கார்பன், மீத்தேன், நீட், ஸ்டெர்லைட், காவிரி என பல விஷயங்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனிதா என்ற மாணவி இறந்தபோது அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் புதிய ஆப் ஒன்றை உருவாக்கி வருகிறார் ஜிவி.
இதுகுறித்து ஜிவி.பிரகாஷ் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... நீட் எனும் அரக்கனால் தங்கை அனிதாவை இழந்தோம். அனிதாவின் வீட்டிற்கு சென்றபோது இனி ஒரு அனிதாவை நீட்டால் பறி கொடுக்கக்கூடாது என முடிவெடுத்தேன்.
என் நண்பர்களுடன் பேசி வல்லுநர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து நீட் தொடர்பாக மூன்று மாதமாக வரைவு திட்டத்தை தயாரித்து, தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்கள் இலவசமாக பயன்பெறும் வகையில் மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கி வருகிறோம்.
தகுதியான மதிப்பெண்கள் இருந்தும், பணம் என்ற ஒரு காரணத்தால் எந்த மாணவரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக எங்களால் முடிந்த முயற்சி இது. இன்னும் சில மாதங்களில் இந்த ஆப் பணி முடிந்து பயன்பாட்டிற்கு வரும். ஆப் உருவாக்க உதவும் எனது குழுவிற்கு வாழ்த்துக்கள்.
இவ்வாறு ஜிவி.பிரகாஷ் கூறியுள்ளார்.