தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சென்னையில் பிறந்து, வளர்ந்து படித்தவரான மகேஷ் பாபுவுக்கு தாய் மொழியான தெலுங்கில் மட்டும் நடித்தால் போதாது, பிறந்த வளர்ந்த ஊரின் மொழியிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை நம்பி 'ஸ்பைடர்' படத்தில் இறங்கினார். ஆனால், அதன் பின் மகேஷ்பாபுவுக்கு அப்படி ஒரு எண்ணமே வரக் கூடாத அளவிற்கு படு மோசமான ஒரு படத்தைக் கொடுத்துவிட்டார் முருகதாஸ்.
அந்தப் படத் தோல்விக்குப் பிறகு கடந்த சில மாதங்களாக பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் இருந்தார் மகேஷ்பாபு. அவர் அடுத்து நடித்துள்ள 'பரத் அனி நேனு' படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அந்தப் படத்திற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது 'ஸ்பைடர்' படத்தின் தோல்வியைப் பற்றி ஏதாவது யோசித்தீர்களா என்று கேட்டதற்கு, 'அப்படியெல்லாம் செய்யும் பழக்கமில்லை' என்று பதிலளித்திருக்கிறார் மகேஷ் பாபு.
ஆசையாக வந்தவரை இப்படி ஒரேயாக ஓட வைத்துவிட்டாரே முருகதாஸ். இனி, தமிழ்ப் படங்களில் நடிக்கும் ஆசையே மகேஷ் பாபுவுக்கு போய்விட்டிருக்குமே....!