ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கன்னடத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற ' யு டர்ன்' படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சமந்தா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஆதி, 'சித்திரம் பேசுதடி' நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நடிகை பூமிகாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நேற்று ஐதராபாத்தில் ஆரம்பமானது. அதில் பூமிகா கலந்து கொண்டார். தற்போது சமந்தா, பூமிகா, நரேன், ஆதி ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருவதாக படத்தின் இயக்குனர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
ஒரு பரபரப்பான த்ரில்லர் ஆக உருவாகி வரும் இப்படம் இந்த வருடக் கடைசியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்த் திரையுலகத்தில் தற்போது எந்த வேலையும் நடைபெறவில்லை என்றாலும் இப்படம் இரு மொழிப் படம் என்பதால் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.