இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஒரு பாடலை வியாபார ரீதியாக பயன்படுத்தும்போது அந்த பாடலுக்கு இசை அமைப்பாளர், பாடலாசிரியர் ஆகியோருக்கு ராயல்டி வழங்க வேண்டும். ஆனால் இதுவரை பாடகர்களுக்கு அது இல்லாமல் இருந்தது. பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட சிலரது முயற்சியால் இந்தியன் சிங்கர் ரைட்ஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு அதன் மூலம் சட்டரீதியாக போராடி இப்போது அந்த உரிமையை பாடகர்களும் பெற்றுள்ளனர்.
அதன் பலனாக இந்த ஆண்டு பாடகர்களுக்கு 51 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ராயல்டியாக கிடைத்துள்ளது. அதனை பாடகர்களுக்கு வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் டான்டன் இதனை பாடகர்களுக்கு வழங்கினார். பாடகர்கள் யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.
பின்னர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசியதாவது: பாடகர்களுக்கு பாடுவதை விட்டால் வேறு தொழில் தெரியாது. என்னை போன்றவர்கள் நடிப்பு போன்று வேறு வித்தைகள் செய்து பிழைத்துக் கொள்கிறோம். ஆனால் மற்றவர்களுக்கு அது தெரியாது. அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த ராயல்டி உதவும். இப்போது வந்திருப்பது 25 சதவிகிதம்தான். இன்னும் 75 சதவிகிதம் ராயல்டி வரவேண்டியது இருக்கிறது. இது வெறும் ராயல்டி மட்டுமல்ல பாடகர்களுக்கான அங்கீகாரம். என்றார்.
விழாவில் பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், மனோ, உன்னி கிருஷ்ணன், சித்ரா, விஜய் யேசுதாஸ், வாணி ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.