தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. பிரபல இயக்குனர் சேகர் கபூர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினர் அனைத்துப் படங்களையும் பார்த்து விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.
இன்று விருதுகள் அறிவிக்கப்பட்ட போது, பல பிராந்திய மொழிப் படங்கள் முக்கிய விருதுகளைப் பெற்றதால் அந்தப் படங்களின் பெயர்கள், விருது பெற்றவர்களின் பெயர்களை உச்சரிக்க சேகர் கபூர் தடுமாறினார். அவருக்கு அந்தந்த மொழி தெரிந்த பத்திரிகையாளர்கள் கூடவே அவற்றைச் சரியாகச் சொல்லி திருத்தமும் செய்தார்கள்.
'பாகுபலி 2' படத்திற்காக சிறந்த ஆக்ஷ்ன் இயக்குனர் விருது அப்பாஸ் அலி மொகுல் என்ற கலைஞருக்கு வழங்கப்படுவதாக அறிவித்தார்கள். அவர் பாலிவுட்டின் பிரபல ஆக்ஷன் இயக்குனர். ஆனால், அவர் 'பாகுபலி 2' படத்திற்காகப் பணியாற்றவேயில்லை. அது பற்றி 'பாகுபலி 2' படத்தின் தயாரிப்பாளரும் உடனடியாக டுவிட்டரில் 'பாகுபலி மற்றும் பாகுபலி 2' படங்களில் அவர் பணிபுரியவேயில்லை' என்று குறிப்பிட்டார்.
பின்னர் அனுப்பப்பட்ட பத்திரிகைச் செய்தியில் 'பாகுபலி 2' படத்தின் பெயர் ஆக்ஷ்ன் இயக்குனர் விருதுக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டதாக அனுப்பினார்கள். ஆனால், அந்த இயக்குனர் யார் என்ற பெயரைக் குறிப்பிடவேயில்லை. 'பாகுபலி 2' படத்தின் ஆக்ஷன் இயக்குனராக லீ விடேகர் என்பவர் பணியாற்றியிருக்கிறார்.