கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
கன்னட யுடர்ன் படத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். மணிரத்னத்தின் காற்றுவெளியிடை படத்தில் தமிழுக்கு வந்த அவர், பின்னர் விக்ரம் வேதா, ரிச்சி ஆகிய படங்களிலும் நடித்தார். தற்போது மிலன் டாக்கீஸ் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தான் அளித்த ஒரு பேட்டியில் மற்ற மொழி சினிமாக்களை விடவும் பாலிவுட்டில் ஒழுக்கமாகவும், திறமையானவர்களும் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
இது தென்னிந்திய சினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய பட உலகில் ஒழுக்கம் இல்லையா? என்று சமூகவலைதளங்களில் அவருக்கு எதிரான கருத்துக்கள் வைரலாகி உள்ளன.