'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காவிரி பிரச்சனை தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில், தனுஷ் இயக்கி நடித்த 'பவர் பாண்டி' படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தனுஷ் முதன்முறையாக இயக்குநர் நாற்காலியில் அமர்ந்த படம் 'பவர் பாண்டி'. இந்தப் படம் வரிவிலக்குக்காக கடைசி நேரத்தில் 'ப. பாண்டி' எனப் பெயர் மாற்றப்பட்டது. ராஜ்கிரண், ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டியன், பிரசன்னா, சாயாசிங் ஆகியோர் நடித்த இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்தது.
சின்ன வயது ராஜ்கிரணாக தனுஷும், சின்ன வயது ரேவதியாக மடோனா செபாஸ்டியனும் நடித்த இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.
தமிழில் ஓரளவு வெற்றியடைந்த இந்தப் படம், தற்போது கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. இதற்கான வியாபார ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தாகியுள்ளது. ராஜ்கிரண் வேடத்தில் அம்பரீஷ் நடிக்கிறார். தனுஷ் வேடத்தில் சுதீப் நடிக்கிறார்.
ரேவதி வேடத்தில் நடிக்க சுஹாசினி மணிரத்னம், குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.