ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாகுபலி படத்தை இயக்கிய ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். இப்படத்தின் கதாசிரியரும் இவர் தான். தெலுங்கில் நிறைய படங்களுக்கு கதை எழுதிய இவர், சில படங்களை இயக்கியிருக்கிறார். ஆனபோதும், பாகுபலி படத்திற்கு பிறகுதான் இவர் பிரபலமானார். அதையடுத்து தமிழில் விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு கதை எழுதினார். ஹிந்தியில் சல்மானின் பஜ்ரங்கி பைஜான் படத்திற்கு கதை எழுதினார்.
தற்போது பாகுபலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கும் ஸ்வர்ணா காட்கம் என்ற சரித்திர தொடருக்கு கதை எழுதுகிறார் விஜயேந்திர பிரசாத். இந்த சீரியலில் பூனம் கவுர், சஞ்சனா கல்ராணி ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கிறார்கள். சஞ்சனா கல்ராணி நடிகை நிக்கி கல்ராணியின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது.