தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் மறக்க முடியாத நடிகர் எஸ்.வி.ரங்கா ராவ். எத்தனையோ படங்களில் நாயகிகளுக்கு அப்பாவாகவே நடித்திருப்பார். அவருடைய யதார்த்தமான நடிப்பும், அந்த சிரிப்பும், தெளிவான குரலும் பல படங்களில் அவரை ரசிக்க வைத்துள்ளன. அவருக்கென்றே உருவாக்கப்பட்ட பல கதாபாத்திரங்களில் அவ்வளவு சிறப்பாக நடித்திருப்பார்.
அந்த மறக்க முடியாத நடிகரான எஸ்.வி.ரங்கா ராவ் கதாபாத்திரத்தில்தான் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநதி' படத்தில் மோகன் பாபு நடித்திருக்கிறாராம். இந்தப் படத்தில் நடித்ததிலேயே சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், பத்திரிகையாளராக நடித்த சமந்தா, ஜெமினி கணேசனாக நடித்த துல்கர் சல்மான், நாகி ரெட்டியாக நடித்த பிரகாஷ் ராஜ், ஏ.நாகேஸ்வர ராவ் ஆக நடித்த விஜய் தேவகொன்டா, ஜமுனாவாக நடித்த ஷாலினி பாண்டே ஆகியோரை விடவும் எஸ்.வி.ரங்கா ராவ் கதாபாத்திரத்தில் நடித்த மோகன் பாபுவுக்குதான் அதிக சம்பளம் கொடுத்திருக்கிறார்களாம்.
மோகன் பாபு மறுத்தும், தயாரிப்பாளரும், இயக்குனரும் மனமுவந்து அந்தத் தொகையைக் கொடுத்திருக்கிறார்கள் என்கிறது டோலிவுட் வட்டாரம்.