ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் சிவகார்த்திகேயன், சமீபத்தில் 'சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்' என்ற பட நிறுவனம் தொடங்கினார். சிவகார்த்திகேயனின் தயாரிப்பில், அவரது நெருங்கிய நண்பரான அருண்ராஜா காமராஜ் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் முதலானோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை லோ பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார். எனவே இப்படத்தின் படப்பிடிப்பை சிவகார்த்திகேயனின் சொந்த ஊரான திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடத்தியுள்ளனர்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சினிமா ஸ்டிரைக் முடிந்ததும் துவங்கவிருக்கிறது. மீண்டும் திருச்சி, லால்குடி பகுதியிலேயே படமாக்க உள்ளனர்.