சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
ஆருத்ரா படம் மூலம் நாயகியானவர், நடிகை மேகாலி. பெங்காலைச் சேர்ந்த இவர், தன் அடுத்தடுத்த படங்களில், தமிழில் பாடி, பேசி நடிக்க உள்ளார். 'போட்டோ ஷூட்'டில் இருந்த, மேகாலியுடன் பேசியதிலிருந்து:
முதலில் நடித்த படம் எது?
பரபரப்பாக பேசப்பட்ட, நிர்பயா கதையில் தான், நான் முதலில் நடித்தேன். பெங்காலி மொழிப்படம் அது; ஆனால், அந்த படம் வெளியாகவில்லை. அதன் பின், பா.விஜய் உடன், ஆருத்ரா படத்திலும், ஸ்கெட்ச் படத்திலும் நடித்தேன். தற்போது, ரகடம் படத்தில், இரட்டை வேடத்தில் நடித்து வருகிறேன். தெலுங்கு படம் ஒன்றிலும், தமிழ் படம் ஒன்றிலும் நடிப்பதற்கான, பேச்சு நடந்து வருகிறது.
பெங்காலியரான நீங்கள், தமிழ் சினிமாவில் நடிக்க வந்தது எப்படி?
என் குடும்பத்தில் அனைவரும், இசைத் துறையில் ஆர்வம் கொண்டவர்கள். நான், என் அம்மா அனைவரும், கமல் ரசிகர்கள். கும்கி படத்தை பார்த்த போது தான், நானும் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என, ஆசை வந்தது. அதற்கான முயற்சியில் இறங்கினேன். தமிழ் கற்றுக் கொண்டேன். பரதம், கதக், கிளாசிக்கல் உள்ளிட்ட, நடனங்களையும் பயின்றேன்.
நீங்களே பாடல் பாடி, 'டப்பிங்' பேசப்போவதாக கூறுகின்றனரே?
ஆமாம்; நான், அடுத்து நடிக்கும் படத்தில், நானே சொந்த குரலில் பாடப்போகிறேன். 'மைம்' கோபி, எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். என் பாத்திரத்திற்கு, விரைவில் நானே, 'டப்பிங்' பேசுவேன்.
ஸ்கெட்ச் படத்தில், விக்ரமுடன் நடித்த அனுபவம் எப்படி?
அவர், ஒரு மிகச்சிறந்த மனிதர். அவருடன், ஒரு காட்சியில் மட்டுமே நடித்தேன். நிறைய கற்றுக் கொடுத்தார். சினிமாவில், அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
சினிமாவில், உங்கள் கவர்ச்சி எந்தளவுக்கு இருக்கும்?
கதைக்கு தேவை என்றால், கவர்ச்சியாக நடித்து தான் ஆக வேண்டும். நான் நடிக்க வந்த பின், பெங்காலி பெண்ணாக இருக்க மாட்டேன். அந்த கதாபாத்திரமாக மாற வேண்டும். ரசிகர்களுக்காக தான் நடிக்கிறோம். அவர்கள் விரும்பும்படி நடிக்க வேண்டும்.
ஒரே சமயத்தில் விக்ரம், அவரது மகன் துருவ் என, இருவரது படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தால், யார் படத்தில் நடிப்பீர்கள்?
நிச்சயமாக, விக்ரம் படத்தில் தான் நடிப்பேன்.
யாருடன் நடிக்க ஆசை?
ரஜினி, கமல், நயன்தாரா உடன் நடிக்க ஆசை.
அரசியலில் ரஜினி, கமல் இருவரில், உங்கள் ஆதரவு யாருக்கு?
எனக்கு அரசியல் தெரியாது. இருவரும், மக்களுக்கு நல்லது செய்வர் என, நம்பிக்கை இருக்கிறது.
எதிர்கால திட்டம்?
நல்ல படங்களை தர வேண்டும். எனக்கு நடிப்பது, மிகவும் பிடிக்கும். ரசிகர்கள் விரும்பும்படி தரமான படங்களை கொடுக்க வேண்டும்.