டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்த் திரையுலகத்தில் மிகப் பெரிய திட்டத்துடன் அடி மேல் அடி எடுத்து வைத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். தன் திரையுலகப் பயணத்தை சாதாரணமாக ஆரம்பித்தவர் படிப்படியாக உயர்ந்து முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அடுத்து அவர் நடிக்க உள்ள படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து நாயகனாக நடிக்க உள்ள படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படம் சம்பந்தமாக சிவகார்த்திகேயன், ரவிகுமார் மற்றும் ரகுமான் இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இதுப்பற்றி ரவிகுமாரிடம் பேசியபோது, அந்தபோட்டோ பழையபடம். தற்போது ஸ்டிரைக் நடப்பதால் படம் தொடர்பான எந்த வேலையையும் முன் எடுத்து வைக்கவில்லை. சிவகார்த்திகேயன், பொன்ராம் படத்தில் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு இன்னும் கொஞ்சம் இருக்கிறது. அது முடிந்த பிறகு தான் என் பட வேலையை ஆரம்பிக்க முடியும் என்றார்.
சயின்ஸ் பிக்ஷ்ன் ஆக உருவாக உள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பது படத்தையும், சிவகார்த்திகேயனையும் வேறு ஒரு கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.