‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஒரு திரைப்படத்திற்கு சென்சார் செய்வதற்கு தயாரிப்பாளர் சங்கத்திடமிருந்து 'கிளியரன்ஸ் லெட்டர்' அதாவது 'தடையில்லா அனுமதிக் கடிதம்' ஒன்றை தயாரிப்பாளர் சங்கம் தரவேண்டும். அந்தக் கடிதம் கிடைத்த பிறகுதான் தணிக்கை வாரியம் அந்தப் படத்தை தணிக்கை செய்வதற்கு எடுத்துக் கொள்ளும்.
அதன்படி 'காலா' படத்திற்காக அனுமதிக் கடிதம் வேண்டி தயாரிப்பாளர் சங்கத்திடம் கடந்த மாதமே கடிதம் கொடுத்துவிட்டார்களாம். ஆனால், ஸ்டிரைக்கைக் காரணம் காட்டி அனுமதிக் கடிதம் தர தயாரிப்பாளர் சங்கம் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக 'காலா' படத் தரப்பிலிருந்து குற்றம் சாட்டுகிறார்கள்.
இது சம்பந்தமாக தயாரிப்பாளர் சங்கத் தரப்பில், வரிசைப்படிதான் அனுமதிக் கடிதம் கொடுத்து வருகிறோம். அதன்படி 'காலா' படத்திற்கும் கொடுப்போம் என்று சொல்கிறார்கள்.
ஆனால், நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் 'காலா' தயாரிப்பு நிறுவனம் சார்பாக கலந்து கொண்ட பிரநிதிதி 'காலா' படத்தை ஏப்ரல் 27ம் தேதி வெளியிட முடிவு செய்துவிட்டோம். எனவே, எங்களின் அனுமதி கடிதத்தைக் கொடுங்கள், இல்லையென்றால் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என கூட்டத்தில் பேசியிருக்கிறார். அவரது பேச்சால் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது சம்பந்தமாக விஷால் விரைவில் ரஜினிகாந்தை சந்தித்து விளக்கமளிக்க உள்ளார் என்றும் தெரிகிறது.