பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
தமிழ்த் திரையுலகத்தில் நடக்கும் வேலை நிறுத்தம் 20வது நாளைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. நேற்று தான் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அவர்களது கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு முதல்வரைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்கள்.
தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருமானமும் போய்க் கொண்டிருக்கிறது. அது பற்றி அரசு நிர்வாகமும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. இதனிடையே, நடிகரும், தயாரிப்பாளருமான சித்தார்த், தமிழக அரசைத் தாக்கி டுவீட் போட்டுள்ளார். அதில்,
“ஒவ்வொரு படமும், இந்த மிருகத்தனமான சினிமா மார்க்கெட்டில் சரிக்கு சமமான சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஒருவருக்கு மட்டும் இந்த சிறப்பு அனுமதியை மட்டும் வழங்கினால், மற்றவர்களுக்கும் வழங்குங்கள். நாம் அனைவரும் ஒன்று தான். ஒற்றுமை, அனைவரும் சமம் ஆகியவை நமக்குள் இல்லை என்றால் கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.
இந்த தமிழ்நாடு அரசு சினிமாவைப் பற்றி எந்த ஒரு கவலையும் படப்போவதில்லை. பல வருடங்களாகவே இதை அவர்கள் நிரூபித்து வருகிறார்கள். இதைத் திடீரென மாற்றுவது என்பது அவர்களுக்கு அதிசயம். துறையை மாற்றியமைக்க வேண்டும் என்பது அவசியம், ஆனால் எந்த விலையில் ?. முதலில் நம் துறையில் ஒற்றுமையைக் காட்டுவோம். பின்னால் மாற்றம் வரும்,” எனத் தெரிவித்துள்ளார்.