ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அருவி படம் மூலம் தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி பாலன். இந்த படத்திற்கு மட்டும் 10-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். இருப்பினும் அவர் இன்னும் அடுத்தப்படத்தில் கமிட்டாகவில்லை.
இரண்டாவது படம் ஏன் இவ்வளவு தாமதம் என்று அதிதியிடம் கேட்டால், அவர் கூறியதாவது... "ஒரு சில கதைகள் கேட்டேன், இரண்டாவது படம் நான் நினைத்த மாதிரி கதை இருக்க வேண்டும் என நினைக்கிறேன். பெரிய இயக்குநர், சிறிய இயக்குநர் படங்களில் நடிக்க வேண்டும் என்பதில்லை.
கதை தான் முக்கியம். அப்பா, அம்மா மற்றும் சில நட்புகளுடன் கதைகள் கேட்கிறேன். எல்லோருக்கும் ஒட்டுமொத்தமாக கதைகள் பிடிக்க வேண்டும். என் முழு கவனமும் சினிமாவில் இருக்கிறது. நல்ல கதைகள் வரும்போது அதை பயன்படுத்தி கொள்வேன். அநேகமாக இன்னும் ஒரு மாதத்தில் என் இரண்டாவது படத்தை முடிவு செய்வேன் என்கிறார்.