டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், அப்படத்தைத் தொடர்ந்து இயக்கியுள்ள படம் 'நரகாசூரன்'. அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஸ்ரேயா, ஆத்மிகா முதலானோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தை கார்த்திக் நரேனே தயாரித்துள்ளார்.
சிலபல காரணங்களால் நரகாசூரன் படத்தை கௌதம் வாசுதேவ் மேனனும் தயாரித்துள்ளதாக அறிவித்தார்கள். அதுவே இப்போது நரகாசூரன் படத்துக்கு மைனஸாகிவிட்டது.
இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய கார்த்திக் நரேன் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில் நரகாசூரன் படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸை கார்த்திக் நரேனுக்கு தெரியாமல் கௌதம் வாசுதேம் மேனன் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கெளதம் மேனன் மீது அதிருப்தியில் இருக்கிறார் கார்த்திக்.
நரகாசூரன் படத்தின் தயாரிப்பிலிருந்து கௌதம் வாசுதேவ் மேனனை விலக்கிவிட்டு தானே வியாபாரத்தை முடித்து படத்தை வெளியிட கார்த்திக் நரேன் திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.