டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பெருவாரியான இளவட்ட ரசிகர்களை கவர்ந்துள்ள சாய் பல்லவி, எந்த அளவுக்கு வேகமாக வளர்ந்தாரோ அதேப்போன்று சமீபகாலமாக கிசுகிசுக்களிலும் சிக்கிக் கொண்டு வருகிறார். குறிப்பாக, அவர் படப்பிடிப்பு தளங்களில் ஹீரோக்களை மதிப்பதில்லை. உடன் நடிக்கும் நடிகைகளிடம் சரியாக பேச்சுவார்த்தையே வைத்துக் கொள்வதில்லை என்று அவரைப் பற்றி சரமாரியாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்தநேரத்தில், தற்போது அவரை ஆந்திர பிரதேச மாநில அமைச்சர் கன்டா ஸ்ரீனிவாச ராவ்வின் மகனும் நடிகருமான ரவிதேஜாவுடன் இணைத்து டோலிவுட்டில் கிசுகிசுக்கள் பரவிக்கொண்டிருக்கிறது. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு செம கோபத்தில் இருக்கிறார் சாய் பல்லவி.
இத்தனைக்கும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை. இந்த வதந்திக்கு அமைச்சர் கன்டா ஸ்ரீனிவாசராவ்வும் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, இதுபோன்ற செய்திகள், தன் மகனின் வாழ்க்கையை பாதிக்கும் என்றும், இதுபோன்ற வதந்திகளை தவிர்க்கும்படியும் கேட்டு கொண்டுள்ளார்.