ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன்-சூரியின் காமெடி கூட்டணி பெரிய அளவில் ஒர்க் அவுட்டானதைத் தொடர்ந்து அந்த படங்களை இயக்கிய பொன்ராம், தற்போது தான் இயக்கி வரும் சீமராஜா படத்திலும் அவர்களை இணைத்திருக்கிறார்.
கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்றது. அதற்காக கிராமத்து செட் அமைத்து படமாக்கினார். மேலும், அங்கு மாதக்கணக்கில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டதால், தினமும் படப்பிடிப்பு முடிந்ததும் சிவகார்த்திகேயன்-சூரி இருவரும் கிரிக்கெட் டீம் உருவாக்கி விளையாடி வந்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் ஒரு அணியாகவும், சூரி இன்னொரு அணியாகவும் விளையாடி வந்த இந்த கிரிக்கெட் விளையாட்டில் சீமராஜா படக்குழுவில் உள்ள பலரும் கலந்து கொண்டனர். ஆனால் சமந்தா கலந்து கொள்ளவில்லையாம். தனக்கு கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் இல்லை என்று சொல்லிக்கொண்டு அவர்கள் விளையாடுவதை அவர் வேடிக்கை மட்டுமே பார்த்தாராம்.