'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
பிரேமம் புகழ் சாய் பல்லவியை, தெலுங்கு நடிகர்கள், சற்று மிரட்சியுடன் தான் பார்க்கின்றனர். சாய் பல்லவி, அடுத்ததாக, கரு என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார். இந்த படம், தெலுங்கில், கனம் என்ற பெயரில், ஒரே நேரத்தில் தயாராகிறது. இதில், ஹீரோவாக இளம் தெலுங்கு நடிகர், நாக சவுரியா நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பின்போது, சாய் பல்லவி, தனக்கு இடையூறு செய்து, மன உளைச்சலை ஏற்படுத்தியதாக, கதறி அழாத குறையாக புகார் கூறியிருந்தார், நாக சவுரியா. சாய் பல்லவியோ, 'எனக்கும், நாக சவுரியாவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. என்னைப் பற்றி, அவர், ஏன் இப்படி கூறினார் எனத் தெரியவில்லை' என, 'டேக் இட் ஈசி'யாக கூறியிருந்தார்.
ஆனாலும், சாய் பல்லவி மீதுள்ள கோபம், நாக சவுரியாவுக்கு இன்னும் தீரவில்லை
போலிருக்கிறது. சமீபத்தில், கனம் படத்தின் விளம்பர நிகழ்ச்சி, ஐதராபாதில் நடந்தது. இதில், படத்தின் ஹீரோவான, நாக சவுரியா பங்கேற்கவில்லை. இதைக் கேள்விப்பட்ட தெலுங்கு ஹீரோக்கள், 'அந்த பொண்ணு, அந்த அளவுக்கா, நாக சவுரியாவுக்கு மன உளைச்சலை
ஏற்படுத்தியது' என, சாய் பல்லவியை பற்றி, ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர்.