ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டைரக்டர் விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள படம் கரு. தெலுங்கு நடிகர் நாக செளரியா நாயகனாக நடித்துள்ள இந்த படம் தெலுங்கில் கனம் என்ற பெயரில் வெளியாகிறது.
இந்த படம் குறித்து சாய் பல்லவி கூறுகையில், அம்மா - மகள் இருவரும் அன்புக்காக ஏங்கும் கதையில் இந்த படம் உருவாகியுள்ளது. உணர்வுப் பூர்வமான இந்த கதையை கமர்சியல் நோக்கமில்லாமல் யதார்த்தமாக இயக்கியிருப்பது உற்சாகமளிக்கிறது. அதற்காக இந்த படத்தை தயாரித்த லைகா புரொடக்சன்ஸ் மற்றும் என்.வி.பிரசாத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் வெளியான பிறகு கருவில் நாயகனாக நடித்துள்ள நாக செளரியாவின் பாத்திரம் பெரிதாக பேசப்படும்.
இந்த படத்தில் எனது மகளாக நடித்துள்ள வெரோனிகாவிடம் நிறைய அன்பு வளர்த்து விட்டேன். அதன்காரணமாக அவளது பெற்றோரிடம் வெரோனிகாவை எனது வளர்ப்பு மகளாக கொடுத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அந்த அளவுக்கு அவளும் என் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கிறாள் என்கிறார் சாய்பல்லவி.