டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குனர் ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள படம் பரியேறும் பெருமாள். இதனை இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பில் தயாரித்துள்ளார்.
கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து, லிஜீஷ், உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பணிகள் முடிந்து விட்ட நிலையில் படம் பற்றி இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியதாவது:
நான், நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவன். நெல்லை மக்களின் வாழ்வியல் பற்றி பல சினிமாக்கள் வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் இன்றைக்கு நெல்லை மக்களின் வாழ்வியல் எப்படி இருக்கிறது என்பதை உள்ளது உள்ளபடி பதிவு செய்கிற படம் இது. நான் எழுதிய மறக்கவே நினைக்கிறேன் தொடரில் வந்த மனிதர்களை காட்சிப்படுத்தியிருக்கிறேன்.
ஒரு தலைமுறை மாற்றத்தின்போது என்னென்ன நடக்கிறது என்பதுதான் திரைக்கதை. நெல்லை மண் மணமும், நெல்லை தமிழுமாய் புதிய சினிமாவாக இது இருக்கும். கதிரும், ஆனந்தியும் சட்டக்கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். என்றார் மாரி செல்வராஜ்.