பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைக்கு ஸ்டார் குடும்பம் என்று சொன்னால் அது சூர்யாவின் குடும்பமாகத்தான் இருக்கும். சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோரில் சிவகுமார் மட்டும் தற்போதைக்கு நடிப்பதை விட்டுவிட்டார். மற்றவர்கள் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கிறார்கள்.
சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் வெளி தயாரிப்பாளர்களின் படங்களில் அதிகமாக நடிப்பதேயில்லை. அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அவர்களே ஐந்தாறு தயாரிப்பு நிறுவனங்களை நடத்திக் கொண்டு அதிலேயே மாறி மாறி நடித்துக கொள்கிறார்கள்.
சூர்யா கடைசியாக நடித்த 'மாசு என்கிற மாசிலாமணி, 24, சி 3, தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களும் அவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கம் படமும் அப்படிப்பட்ட தயாரிப்புகள்தான்.
ஜோதிகா கடைசியாக நடித்த '36 வயதினிலே, மகளிர் மட்டும்' ஆகிய படங்களும் அப்படித்தான் தயாரிக்கப்பட்டன.
கார்த்தி கடைசியாக நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படமும், தற்போது தயாராகி வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படமும் அவர்களது குடும்பத் தயாரிப்புகள்தான்.
அந்த வரிசையில் இன்று கார்த்தி நடிக்கும் 17வது படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவும் குடும்பத் தயாரிப்புதான்.
விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் கூட மற்றவர்களின் தயாரிப்பில் நடிக்கும் போது சூர்யாவின் குடும்பத்தினர் பெரும்பாலும் அவர்களது தயாரிப்புகளிலேயே நடிக்கின்றனர்.
சூர்யா, கார்த்தி ஆகியோரைப் பார்த்து தற்போது வளர்ந்து வரும் பல நடிகர்களும் அவர்கள் வழியில் பயணிக்க ஆரம்பித்தால் தமிழில் தயாரிப்பாளர்களே இருக்க மாட்டார்கள்.