ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏப்ரல் 4ம் தேதி திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு முன் நெடுவாசலில் போராட்டம் நடத்தும் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் முடிவு செய்துள்ளார்.
ஆலோசனை
மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவக்கிய நடிகர் கமல், தொடர்ந்து திருச்சியில் வரும் ஏப்ரல் 4ம் தேதி மாநாடு நடத்த போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் அடுத்த கட்ட பயணம் மற்றும் கிராமங்கள் தத்தெடுப்பு தொடர்பாக ஆலோசனை நடந்தது.
ஏப்ரல் 4ல் திருச்சி பொதுக்கூட்டத்தில் கமல் பங்கேற்பது என்றும், முன்னதாக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் போராட்டம் நடத்தும் மக்களையும், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ,புதுக்கோட்டை மாவட்ட கிராம மக்களை நேரடியாக சந்திப்பது என்றும் கமல் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.