டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கன்னடத் திரையுலகத்தின் முக்கிய ஆளுமை குடும்பமாக இருப்பது மறைந்த நடிகர் ராஜ்குமார் குடும்பம். அவருடைய மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோரும் நடிகர்கள் தான். இவர்களில் புனித் ராஜ்குமாருக்கு கன்னடத் திரையுலகில் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. ஏறக்குறைய ஒரு சூப்பர் ஸ்டார் ஆகவே அவர் அங்கு பார்க்கப்படுகிறார்.
சமீபத்தில் அவரை தமிழ்ப் படத்தில் நடிக்கக் கூடாது என கன்னட ரசிகர்கள் பலர் அவருடைய வீட்டு முன் ஆர்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். அந்த விவகாரம் வெளியில் தெரியாமல் அப்படியே மறைக்கப்பட்டுவிட்டது.
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக புனித் ராஜ்குமாரிடம் பேசியிருந்தனர். அவரும் சம்மதித்து படப்பிடிப்புக்கு கிளம்பத் தயாராகிவிட்டார். அதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த விஷயம் பற்றிக் கேள்விப்பட்ட சில கன்னடப் பிரமுகர்கள், கன்னட ரசிர்களைத் திரட்டி அவருடைய வீட்டு முன் ஆர்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
புனித் ராஜ்குமார் ஒரு கன்னட நடிகர், அவர் வாயால் தமிழ் மொழி பேசி அவர் தமிழ்ப் படத்தில் நடிக்கக் கூடாது என அவர்கள் ஆர்பாட்டத்தில் கோஷம் எழுப்பியுள்ளார்கள். எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து புனித் ராஜ்குமார் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடிக்கும் முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். இதனால் தான், அவர் நடிக்கும் கதாபாத்திரத்தில் தற்போது சசிகுமார் நடிக்க உள்ளார்.
தமிழ்ப் படத்தில் நடிக்க எதிர்ப்பு வந்ததையடுத்து விலகிக் கொண்ட புனித் ராஜ்குமார் நடிக்கும் நேரடி கன்னடப் படம் ஒன்றை கௌதம் மேனன் இயக்க உள்ளார். கன்னட நடிகைகள் மட்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கலாம், நடிகர்கள் நடிக்கக் கூடாது என கன்னடப் பிரமுகர்கள் தடுப்பதால் பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளது.