தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை தற்போது சினிமாவாக தயாராகி வருகிறது. தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும், தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் படமாகி வருகிறது. இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சமந்தா, துல்கர் சல்மான் உள்பட பலர் நடிக்கிறார்கள். சாவித்திரியுடன் நடித்த ஜமுனா என்னிடம் கேட்காமல் எப்படி சாவித்ரி வாழ்க்கையை படமாக எடுக்கலாம் என்று கேட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
சாவித்திரியோடு நடித்தவர்களில் நான் மட்டும் தான் உயிருடன் இருக்கிறேன். சாவித்திரியை பற்றி எனக்குத்தான் நிறைய விஷயங்கள் தெரியும். ஆனால் என்னிடம் எதுவும் கேட்காமல் அவரது வாழ்க்கையை படமாக்குவது வேதனையாக இருக்கிறது. இந்த படத்தில் சாவித்திரியாக நடிப்பவருக்கு தெலுங்கு தெரியாது. மொழி தெரியாத அவரால் சாவித்திரி கதாபாத்திரத்துக்கு திரையில் எப்படி உயிர் கொடுக்க முடியும்?
சாவித்திரிக்கு சென்னையில் 3 பங்களா வீடுகள் இருந்தன. அவரை மாதிரி சினிமாவில் எந்த நடிகையும் சம்பாதிக்கவில்லை. வீட்டில் நீச்சல் குளம் கட்டி இருந்தார். மைசூரில் இருந்து சந்தன கட்டைகளை வரவழைத்து பூஜை அறையை உருவாக்கி இருந்தார். கொடைக்கானலிலும் வீடு இருந்தது. ஆனால் அந்த சொத்துகள் அனைத்தும் எப்படியோ கரைந்து போனது. கடைசி காலத்தில் மதுவுக்கு அடிமையாகி, உடல் மெலிந்து துரும்பாகி கோமாவிலேயே இறந்துபோனார். இப்படி அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் எனக்கு தெரியும். என்னிடம் கேட்காமல் எப்படி சாவித்ரி வாழ்க்கையை படமாக எடுக்க முடியும்?. அவரைப்பற்றி அதிகம் அறிந்தவள் நான் தான் என்கிறார் ஜமுனா.