ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தில் இருக்கும் டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். அவருக்கு வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்தாலும் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்றபடி இருக்கிறார். விஜய் ஜோடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும், விக்ரம் ஜோடியாக ஹரி இயக்கத்தில் 'சாமி ஸ்கொயர்' படத்திலும், விஷால் ஜோடியாக லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி 2' படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
படப்பிடிப்புக்கு வருவதில் மிகவும் சரியாக இருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ். அதற்காக அவரைப் பாராட்டுபவர்கள் வேறொரு விஷயத்திற்காக கடிந்து கொள்கிறார்கள். தினமும் அவர் மேக்கப் போட்டு முடிப்பதற்கு 2 மணி நேரத்திற்கும் மேல் எடுத்துக் கொள்கிறாராம். காலையில் வந்ததும் கேரவனுக்குள் செல்பவர் இரண்டு மணி நேரம் கழித்து சுமார் 11 மணி அளவில்தான் கீழே இறங்கி வருகிறாராம். அவர் வருவதற்காக படக்குழுவினர் அனைவரும் காத்திருக்கிறார்களாம். தனக்காக பலரும் காத்திருப்பது கீர்த்திக்குத் தெரியாதா என்ன ?.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் முகத்தில் ஏன் அவ்வளவு மேக்கப் இருந்தது என்ற கேள்விக்கு இப்போதுதான் விடை கிடைத்துள்ளது.