விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
நடிகர் சிவகுமார் ஓவியர் மட்டுமல்லாது சிறந்த பேச்சாளரும் கூட. கம்ப ராமாயணம், மகாபாரதங்களை இரண்டரை மணிநேரத்தில் எந்த குறிப்பும் இல்லாமல் பேசி சாதனை படைத்தவர். இவரின் மகாபாரதச் சொற்பொழிவு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. தற்போது அது இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தமாக வெளிவந்துள்ளது.
இந்த புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது பேசிய சிவகுமார், மகாபாரதம் நாவலை ஒரு சில ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து சொற்பொழிவு ஆற்றியுள்ளேன். மாருதி வெங்கடாசலம் என்ற பெண்மணி அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார்.
ஒரு நாள் குமார் என்னிடம், இதை இத்தாலி-யில் மொழிபெயர்ப்பு செய்ய போவதாக கூறினார். காமெடி பண்ணுகிறார் என்று எண்ணினேன். ஒரு ஆண்டு ஆகும் என்று நினைத்தேன், ஆனால், மூன்றே மாதங்களில் முடித்துவிட்டார். மிகுந்த மகிழ்சியாக இருந்தது. அவ்ளோ பெரிய காவியம் மகாபாரதம் அது வேறொரு மொழியில் புத்தகங்களாக மாறி இத்தாலி செல்வதற்கு கண்டிப்பாக நான் உதவி செய்வேன்.
வாழ்க்கையின் முடிவில் தான் வரவு செலவு கணக்கு பார்க்க வேண்டும் என்று கண்ணதாசன் கூறியுள்ளார். நான் 75 % வாழ்கை வாழ்ந்துவிட்டேன். இன்னும் எத்தனை நாட்கள் இருக்க போகிறேன் என்று தெரியவில்லை. இப்போது வரவு செலவு கணக்கு பார்க்கலாம் என்று எண்ணுகிறேன்.
ராமாயணம், மகாபாரதம் இந்தியாவின் அடையாளம். இந்த நேரம் நான் ஓவியனாக இருந்திருந்தால் திருவண்ணாமலையில் தாடியுடன் கல்யாணம் ஆகாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், கடவுள் என்னை நடிகனாக மாற்றி கல்யாணம் செய்ய வாய்ப்பு கொடுத்து இரண்டு குழந்தைகளையும் கொடுத்துள்ளார். கடவுளுக்கு நன்றி.
இவ்வாறு சிவகுமார் கூறினார்.