600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
சந்தானம் கதாநாயகனாக நடித்த படங்களிலேயே ஓரளவுக்கு கமர்ஷியலாக வெற்றியடைந்த படம் 'தில்லுக்கு துட்டு'. இந்தப் படத்தை இயக்கியவர் 'லொள்ளு சபா' டிவி நிகழ்ச்சியின் இயக்குநரான ராம்பாலா. சந்தானம், ராம்பாலா இருவரும் முதன் முதலாக இணைந்த தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
தில்லுக்கு துட்டு படத்தின் முதல் பாகத்தை 'ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்தது. தற்போது இரண்டாம் பாகத்தை சந்தானமே தயாரிக்க உள்ளார். சக்கப்போடுபோடுராஜா படத்தை விடிவி கணேஷ் பெயரில் தயாரித்ததைப் போலவே இந்தப் படத்தை இயக்குனர் ராம் பாலாவின் பெயரில் சந்தானமே சொந்தமாக தயாரிக்கவிருக்கிறார்.
இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. 'கயல்' சந்திரன் நடிப்பில் ராம்பாலா இப்போது 'டாவு' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
சந்தானம் ஹீரோவாக நடித்து வருத் 'சர்வர் சுந்தரம்', 'ஓடி ஓடி உழைக்கணும்', 'மன்னவன் வந்தானடி' ஆகிய படங்கள் பைனான்ஸ் பிரச்சனையில் முடங்கிக் கிடக்கின்றன. எனவே 'தில்லுக்கு துட்டு' பார்ட் 2 படத்தை எடுக்கும் முயற்சியில் சந்தானம் இறங்கியுள்ளார்.
சந்தானம் நடிப்பில் வெளியாகிய படங்களின் இரண்டாம் பாகம் இதுவரை உருவானதிலை. 'தில்லுக்கு துட்டு 2' படம் தான் சந்தானம் நடிக்கும் முதல் இரண்டாம் பாகப்படம்.