பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பொதுவாக இயக்குனர் பாலா மீது ஒரு கருத்து உண்டு. அவர் நல்ல படம் எடுப்பார், படம் விருதுகள் பல வாங்கும், பரபரப்பாக பேசப்படும். ஆனால் தயாரிப்பாளர்களுக்கு அந்தப் படத்தால் எந்த பயனும் இருக்காது என்பார்கள். அதனால் பி.ஸ்டூடியோ என்ற பெயரில் தானே சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படம் எடுக்கத் தொடங்கினார். இணைத்தயாரிப்பாளர் என்று சிலரை கடைசி நேரத்தில் சேர்த்துக் கொள்வார்.
சமீபத்தில் அவர் இயக்கிய படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை. அதனால் இந்த முறை நாச்சியார் படத்தை வித்தியாசமான கோணத்தில் உருவாக்கினார். வருடக் கணக்கில் படம் எடுக்கும் பாலா இந்தமுறை குறுகிய கால தயாரிப்பாக நாச்சியாரை உருவாக்கினார். படம் குறித்து இதுவரை பொது வெளியில் விரிவாக பேசவில்லை. படத்தின் டீசர் குறித்து சர்ச்சைகள் வந்தபோதுகூட அதற்கு மறுப்போ விளக்கமோ தரவில்லை. சத்தமின்றி ஒரு வெற்றி தர வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருக்கிறது.
நாளை நாச்சியார் படம் வெளிவருகிறது. முதல் டீசரில் ஜோதிகாவை ஒரு கெட்டவார்த்தை பேச வைத்து சர்ச்சையை உண்டாக்கியவர், இப்போது இந்து, முஸ்லிம், கிருஸ்தவம், பவுத்தம் என 4 மத வழிபாட்டை காட்டிவிட்டு இறுதியில் ஜோதிகா "கோவிலா இருந்தாலும் குப்பை மேடா இருந்தாலும் உங்களுக்கு....." என்றபடி விரலை ஆட்டுகிறார். ஒரு சேரிப்பகுதியில் நடக்கும் பாலியல் தொடர்பான க்ரைம் பற்றி போலீஸ் அதிகாரியான ஜோதிகா துணிந்து துப்பறிகிற படம் என்பதே இதுவரை படத்தை பற்றி டிரைலர் உணர வைத்திருக்கிறது. படத்தின் நோக்கமும், பாலாவின் நோக்கமும் நாளை தெரிந்து விடும்.