ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தில் 20 வருடங்களுக்கு முன்பு இயக்குனராக அறிமுகமானவர்களில் இன்னமும் தொடர்ந்து படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரே இயக்குனர் சுந்தர் .சி மட்டுமே. எப்படி இத்தனை வருடங்களாக உங்களால் மட்டும் படங்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்க முடிகிறது என்று ஒரு முறை அவரிடம் கேட்ட போது, 'காலத்திற்கேற்றபடி நம்மை 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அந்த 'அப்டேட்' என்ன என்பது அவருடைய படங்களைப் பார்த்தாலே தெரியும்.
இசையமைப்பாளர், நடிகர்கள் என அந்தந்த காலகட்டத்தில் யார் டிரென்டிங்கில் இருக்கிறார்களோ அவர்களை வைத்தே படங்களை இயக்குவார். கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, சதீஷ், ரோபோ சங்கர் என நகைச்சுவை நடிகர்களைப் பார்த்தாலே அதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
'கலகலப்பு 2' படம் பற்றி இருவிதமான விமர்சனங்கள் வந்தாலும் பொழுது போக்கு படமாக இருப்பதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். இந்தப் படத்தை விளம்பர செலவு உட்பட சுமார் 8 கோடிக்குள் முடித்துக் கொடுத்துவிட்டாராம் இயக்குனர் சுந்தர் .சி. அதில் அவருடைய சம்பளம் 10 கோடியைச் சேர்க்கவில்லை என்கிறார்கள். படத்தின் தமிழ்நாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகிய இரண்டும் சேர்ந்து 15 கோடி வரை விற்கப்பட்டுள்ளது.