தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரேமம் சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாகி விட்டார். தெலுங்கைப்பொறுத்தவரை பிடா, எம்சிஏ படங்களில் நடித்தவர் தற்போது சர்வானந்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தெலுங்கு படங்களில் அவர் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே படப்பிடிப்பு தளத்துக்கு தாமதமாக வருகிறார். சக நடிகைகளிடம் ஈகோ பார்க்கிறார் என்று அவரைப்பற்றி தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், தற்போது சர்வானந்துடன் நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கு ரூ. 1.5 கோடி சாய் பல்லவி சம்பளம் வாங்கியிருப்பதாக ஒரு பரபரப்பு செய்தி டோலிவுட்டில் வெளியாகியிருக்கிறது. இந்தி செய்தி வெளியானதில் இருந்து இரண்டே இரண்டு படங்களில் நடித்த நடிகைக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்று ஒட்டு மொத்த டோலிவுட் நடிகைகளும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்களாம்.
இந்த செய்தி உண்மையா? இல்லை வதந்தியா என்பது சாய் பல்லவி அடுத்து இதுகுறித்து அளிக்கும் விளக்கத்திற்கு பிறகுதான் தெரியவரும்.