மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளிவந்த படம் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'. இப்படம் நகைச்சுவையான சரித்திரப் படமாக இருந்ததால் அந்தப் படத்தில் நாயகனாக நடித்த வடிவேலுவையும் நாயகனாக ஏற்றுக் கொண்டு படத்தை ரசிகர்கள் வெற்றி பெற வைத்தார்கள்.
படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கடந்த சில வருடங்களாகவே முயற்சித்து வந்தார்கள். கடைசியாக மீண்டும் வடிவேலு நடிக்க, சிம்புதேவன் இயக்க, லைகா புரொடக்ஷன்ஸ், ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' என படத்திற்குத் தலைப்பு வைத்து முதல் பார்வையை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியிட்டார்கள்.
அதன்பின் சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள ஸ்டுடியோவில் பல கோடி ரூபாய் செலவு செய்து மிகப் பிரம்மாண்டமான செட்டுகளையும் அமைத்து ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்கள். ஆனால், அதற்குள்ளாக படத்தின் இயக்குனருக்கும், வடிவேலுவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக படப்பிடிப்பு நின்று போனது.
அதன் பின் வடிவேலுவை தயாரிப்பு தரப்பிலிருந்தும், இயக்குனர் தரப்பிலிருந்தும் தொடர்பு கொண்டு பேசியும் வடிவேலு படப்பிடிப்புக்கு வரவேயில்லை. அதைத் தொடர்ந்து அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தினர் பேசியும் வடிவேலு மீண்டும் வந்து நடிப்பதாக இல்லை என்று சொல்லப்படுகிறது.
இதனிடையே, தயாரிப்பாளர் சங்க சமரசத்தையும் ஏற்றுக் கொள்ளாத வடிவேலு மீது 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' தயாரிப்பாளர்கள் வழக்கு தொடரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், இனி 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படம் தொடர்ந்து நடைபெற வாய்ப்பில்லை. வடிவேலுவை நீக்கி விட்டு வேறு யாராவது நடித்தாலும் அது பொருத்தமாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.