'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் கண்ணே கலைமானே படத்தில் உதயநிதி ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. இதன் படப்பிடிப்புகள் மதுரையில் தொடங்கி நடந்து வருகிறது. தமன்னா நடித்து வருகிறார். படப்பிடிப்பின் இடைவெளியில் தமன்னா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
நேற்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாகரீக உடை அணிந்து வந்த தமன்னா கடைவீதியில் காரைவிட்டு இறங்கி அம்மன் சன்னதி வழியாக கோவிலுக்குள் சென்றார். மீனாட்சி அம்மன் சன்னதி, சுந்தரேசுவரர் சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார். முக்கிய பிரமுகர்கள் வழியாக செல்லாமல் பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி கும்பிட்டார்.
சில தினங்களுக்கு முன்னர் மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து கேள்விப்பட்டு, கோயிலுக்கு வந்ததாகவும், அதுகுறித்து மனவேதனை அடைந்ததாகவும் கூறப்படுகிறது.