தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் மகாநதி. தமிழில் இப்படம் நடிகையர் திலகம் என்ற பெயரிலேயே வெளியாகிறது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஜெமினிகணேசனாக துல்கர்சல்மான் நடிக்கிறார். அவர்களுடன் மோகன் பாபு, சமந்தா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
மேலும், இப்படம் மார்ச் 29-ந்தேதி திரைக்கு வரயிருப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக மகாநதி படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இதையடுத்து அப்படத்தின் இயக்குனரான நாக் அஸ்வின் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், மகாநதி படம் குறித்து வெளியான வதந்திகளை நம்ப வேண்டாம். திட்டமிட்டபடி மார்ச் 29-ந்தேதி படம் திரைக்கு வருகிறது என்று செய்தி வெளியிட்டுள்ளார்.